Skip to content
Home » திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..

திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..

கோடை காலத்தை முன்னிட்டு அதிமுகவின் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் ஆணைக்கிணங்க அதிமுக நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், பழங்கள், குளிர்பானங்கள் வழங்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை

மாவட்ட செயலாளர் ப.குமார் திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, பழங்கள், மற்றும் குளிர்பானங்களை வழங்கினார். முன்னாள் கோட்டத் தலைவர் ஏ பி கிருஷ்ணமூர்த்தி, 37 வது வட்டச் செயலாளர் என்.எஸ்.பி ரவிசங்கர் ஆகியோர் இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தனர். இந்நிகழ்வில் தொழிலதிபர் சபரி, பகுதிச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் ஐடிவி ங் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!