Skip to content
Home » திருச்சி அருகே போதை ஊசி மாத்திரைகள் விற்ற வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது…

திருச்சி அருகே போதை ஊசி மாத்திரைகள் விற்ற வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பா குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரம் வயது (32) அவர் தனது உதவியாளருடன் காட்டூர் பகுதிக்கு வந்த பொழுது அந்த பகுதியில் சட்டவிரோதமாக ஆட்டோவில் வைத்து பள்ளி கல்லூரி அருகே போதை வஸ்துகளை விற்றுக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இது சம்பந்தமாக அவர் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் போலீசார் விரைந்து  சென்று பார்த்தபோது  ஆட்டோவில் வைத்து போதை பொருள்கள் விற்ற திருச்சி வரகனேரி சந்தானபுரத்தை சேர்ந்த முகமது யூசுப் மகன் ஹசன்அலி (26) இவன் தற்பொழுது வடக்கு காட்டூர் பாத்திமாபுரம் பகுதியில் வசித்து வருகிறான். இவனது தாய் ரமிஜா பேகம் (43), தம்பி மனைவி ஆஷிகா பானு (20) ஆகிய மூன்று பேரும்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை ஊசி மற்றும் மாத்திரைகளை ஆட்டோவில் வைத்து விற்றுக் கொண்டிருந்தப்போது திருவெறும்பூர் போலீசார் கையும் களவுமாக அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர் அப்பொழுது ஆட்டோவை பரிசோதித்த பொழுது ஆட்டோவில் ஆயுதங்களும் இருந்தது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் அவர்களிடம் இருந்து

போதைப்பொருள் விற்பதற்கு பயன்படுத்திய ஆட்டோ, 360 ரூபாய் பணம் போதை  மாத்திரைகள் 26, நைட்ரஜன் மாத்திரை 7,  சிரஞ்சி12, ஒரு வால், ஒரு அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த பொழுது ஹசன்அலி மீது திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் அரியமங்கலம் போலீஸ் நிலையங்களில் போதை பொருள் விற்றதாக 12 வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் அவர்கள் மூன்று பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!