திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனத்தில் உள்ள துர்கா பூஜா கமிட்டி மற்றும் பெங்கால் சமாஜ் சார்பில் 38வது ஆண்டு துர்கா பூஜை விழா மிக சிறப்பாக நடந்தது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் திருவெறும்பூர் அருகே உள்ளது. இந்த நிறுவனத்தில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
அப்படி கல்கத்தாவை சேர்ந்தவர்கள் பெங்கால் சமாஜ் என்ற பெயரில் அமைப்பு வைத்து நடத்தி வருகின்றனர். அவர்களின் கலாச்சார விழாவாக துர்கா பூஜா விழா ஆண்டுதோறும் பெல் குடியிருப்பு பகுதியில் கொண்டாடுவது
வழக்கம் அப்படி கொண்டாடும் பொழுது துர்க்கை, விநாயகர் உள்ளிட்ட சாமி சிலைகளை வைத்து வழிபாடு செய்து பின்னர் திருச்சியில் உள்ள காவிரி ஆற்றில் கரைப்பது வழக்கம
அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு 38வது ஆண்டாக கடந்த 20 ஆம் தேதி துர்கா பூஜை தொடங்கி 24ஆம் தேதியான இன்று வரை 5 நாட்கள் நடைபெற்றது. 5 நாட்களும் புதிதாக வைக்கப்பட்டுள்ள துர்க்கை, விநாயகர் உள்ளிட்ட சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. பின்னர் 24ஆம் தேதியான ஆன இன்று தாரை தப்பட்டைகள் முழங்க வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வேங்கூர் பூசை துறையில் காவிரி ஆற்றில் துர்க்கை, விநாயகர் உள்ளிட்ட சாமி சிலைகள் கரைக்கப்பட்டது. இந்த விழாவில் துர்கா பூஜா கமிட்டியை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் பெங்கால் சமாஜத்தை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.