Skip to content
Home » திருச்சி காவிரி பாலத்தில் டூவீலர்-கார் மோதி விபத்து…இளைஞர் பலி…

திருச்சி காவிரி பாலத்தில் டூவீலர்-கார் மோதி விபத்து…இளைஞர் பலி…

திருச்சி காவிரி பாலத்தில் இன்று இரவு 8மணி அளவில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டனர்.இதில்

இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த உறையூர் பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த கத்தபரிமாணம் (வயது 30) என்ற இளைஞர் ஓட்டி வந்துள்ளார். அவரது பின்னால் அவரது நண்பர் அமர்ந்து இருந்துள்ளார். இதில் உறையூரை சேர்ந்த கத்தபரிமாணம் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

இது குறித்து ஸ்ரீரங்கம் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!