Skip to content
Home » திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறை காவலர்களுக்கான 7 மாத பயிற்சி துவக்கம்..

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறை காவலர்களுக்கான 7 மாத பயிற்சி துவக்கம்..

  • by Senthil

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சிறை காவலர்களுக்கு 7 மாத அடிப்படை பயிற்சியை சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் பூஜாரி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் துணைத் தலைவர் ஜெயபாரதி வரவேற்புரையாற்றினார். சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை

இயக்குனர் அமரேஷ் பூஜாரி சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பயிற்சி முகாமில் உள்ள பயிற்சி காவலர்கள் தங்கும் விடுதி மற்றும் சமையல் அறை உள்ளிட்ட பகுதிகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். இறுதியாக மத்திய சிறையின் முதல்வர் மற்றும் சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள் நன்றி உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!