Skip to content
Home » திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் டாஸ்மாக் முன்பு 2 ஆண் சடலம் மீட்பு….

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் டாஸ்மாக் முன்பு 2 ஆண் சடலம் மீட்பு….

  • by Senthil

திருச்சி, சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு பழக்கடை அருகாமையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என உடனடியாக தெரியவில்லை அவர் உடல் நலக்குறைவு காரணமாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது பற்றி சிந்தாமணி கிராம நிர்வாக அலுவலர் அனீஸ் பாத்திமா கோட்டை போலீஸ் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜு வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

——————————————————————————————-

திருச்சி, புத்தூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை எதிர்ப்புறம் இந்திரா காந்தி சிலை அருகாமையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவரைப் பற்றிய விவரங்களும் உடனடியாக கிடைக்கவில்லை.
இது குறித்து புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் ராஜ் உறையூர் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ கோப்பெருஞ்சோழன் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!