Skip to content
Home » திருச்சி சிட்டியின் ஒரு பகுதியில் ஒரு வேளை மட்டுமே குடிநீர்…

திருச்சி சிட்டியின் ஒரு பகுதியில் ஒரு வேளை மட்டுமே குடிநீர்…

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஆளவந்தான் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து வார்டு எண் : 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு குடிநீரானது காலை 5.00 மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் இருவேளை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது கொள்ளிடம் ஆற்றில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் , நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீரானது மேற்கண்ட வார்டுகளுக்கு தொடர்ந்து இருவேளை வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது . ஆகையால் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சீர்செய்யும் வரை , வார்டு எண் : 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு குடிநீரானது காலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை ஒருவேளை மட்டும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது .
இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும் , குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் , திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!