Skip to content
Home » திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகள்…

திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகள்…

திருச்சி புதிய கலெக்டர் அலுவலகம் பின்புறம் பழைய கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அதிக அளவில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஊழியர்கள் வந்து செல்கின்றனர்.

இங்கு நிறைய அரசு அலுவலகங்கள் செயல்படுவதால் இங்கு உள்ள குப்பைகள் அதன் வளாகத்திலேயே கொட்டப்படுவதாகவும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படாத ஏற்படுவதாகவும் அங்கு வரும் போது மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுவதாகவும் கலெக்டர் அலுவலகத்திலேயே இப்படி என்றால் எப்படி என்றும் மாவட்டத்திற்கே முன்னுதாரணமாக இருக்க வேண்டிய இடம் இப்படி இருந்தால் எப்படி என்றும் பொதுமக்கள் முணுமுணுத்து செல்கின்றனர்

இதனால் உடனடியாக பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள அந்த குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் இனிமேல் இது போல் குப்பைகளை வெளியில் கொட்ட கூடாது என்றும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!