Skip to content
Home » திருச்சியில் தோழியுடன் கல்லூரி மாணவர் மாயம்…

திருச்சியில் தோழியுடன் கல்லூரி மாணவர் மாயம்…

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் கல்யாணசுந்தரம் தெரு வசித்து வருபவர் அக்பர். இவரது மகன் சேக் அப்துல்லா (17). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்து வருகிறார்.  2  நாட்களுக்கு முன்பு ஒரு இளம் பெண்ணை அவர் வீட்டுக்கு அழைத்து வந்து தனது தோழி என அறிமுகம் செய்தார் .இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் சகிலா பிவி மகனை கண்டித்தார். அதன் பின்னர் சேக் அப்துல்லா அந்த பெண்ணை அவரது வீட்டில் விட்டு விட்டு வருவதாக கூறிச் சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி சகிலா பிவி அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் .அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!