Skip to content
Home » திருச்சி மாநகராட்சியை கண்டித்து இரவில் பொதுமக்கள் முற்றுகை..

திருச்சி மாநகராட்சியை கண்டித்து இரவில் பொதுமக்கள் முற்றுகை..

  • by Senthil

திருச்சி ஏர்போர்ட் அருகே கொட்டப்பட்டு பகுதியில் ஐஸ்வர்யா எஸ்டேட் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் கடந்த சில வருடங்களாக திருச்சி மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டும், சாலை வசதி சரியாக இல்லாமலும் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் திடீரென அந்தப் பகுதியில் பூங்கா மற்றும் நூலகம் அமைப்பதற்கான பொது இடத்தில் பாதாள சாக்கடை பணிக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் ராட்சத குழி தோண்டப்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையம் வந்தால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுமே எனவும் இதன் அருகே ரேஷன் கடை, வாட்டர்டேங்க் உள்ளிட்டவைகள் இருப்பதாகவும் ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட அவர்களிடம் மனு அளித்ததாகவும் இதுவரை பணிகள் நிறுத்தாமல் நடைபெற்று வருவதாகவும் இந்த நிலையில் இரவு திடீரென அப்பகுதி பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ராட்சத குழி தோண்டிக்கொண்டிருந்த ஜேசிபி இயந்தித்தை முற்றுகையிட்டனர். இதனை அறிந்த பொன்மலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!