இந்திய திருநாட்டின் 75வது குடியரசு தினநாளில் திருச்சி செந்தண்ணீர்புரம் மாநாகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் எழிலரசி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். சிறப்பு விருந்தினராக 35 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ், மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம் , முன்னாள் மாணவர் சதீஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து
கொண்டு கலைநிகழ்ச்சி மற்றும் விளையாட்டுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருள்கள் வழங்கினார்கள். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. இவ்விழாவில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .