திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அண்ணாநகரை சேர்ந்தவர் ரமேஷ்(48), மரம் அறுக்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுமித்ரா(38), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் முருகானந்தம்(21) வேலை எதுவும் இல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் காதல் தி்ருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்.
வேலை இல்லாததால் மிகவும் கஷ்டப்பட்டார். வீட்டுக்கு வாடகை கொடுக்க கூட பணம் இல்லை. இதனால் தந்தை ரமேஷ் வீட்டுக்கு வந்த முருகானந்தம், வீட்டை காலி செய் என தந்தையிடம் தகராறு செய்து வந்தார். பல நாட்களாக தந்தையிடம் தகராறு செய்தார்.
இதனால் மனமுடைந்த ரமேஷ் அவரது மனைவி சுமித்ரா ஆகியோர் நேற்று அரளி விதையை அரைத்து குடித்து விட்டனர். உடனடியாக அவர்களை லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ரமேஷ் இறந்து விட்டார். மேல் சிகிச்சைக்காக சுமித்ரா திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார்.
இது குறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.