Skip to content
Home » திருச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உள்பட 8 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்….

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உள்பட 8 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கொணலை கீழத் தெருவை சேர்ந்தவர்  சவரிமுத்து(50). விவசாயியான இவர் கிராமத்தின் ஒதுக்கப்புறமுள்ள தனது சொந்த விவசாயப் பகுதியில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் ஆடுகளுக்கு பாதுகாப்பாக அங்கே தங்கி வருகிறார். ஆட்டுக் கொட்டைகளுக்கு பாதுகாப்பிற்காக மின் விளக்குகளை அமைத்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு மின்விளக்குக்கு செல்லும் ஒயரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அந்த மின் வயர் கொட்டகை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பியில் பட்டுள்ளது.அப்போது எதிர்பாராத விதமாக ஆடுகள் மீது மின்சார பாய்ந்து கீழே சரிந்தன. இதைக் கண்ட விவசாயி சவரிமுத்து ஆடுகளை தூக்கச் சென்றபோது அவர் மீதும் எதிர்பாராதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தார். இன்று காலை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் விவசாயி சவரிமுத்தும், ஆடுகளும்

இறந்து கிடந்த்தை கண்டு அதிர்ச்சடைந்தனர்.இது குறித்து சிறுகனூர் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து சிறுகனூர் போலீசார் சவரிமுத்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த ஆடுகளை கால்நடை மருத்துவரை கொண்டு சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்தனர். மேலும் மின்சாரம் தாக்கி இறந்தார்களா, இல்லை வேற ஏதும் காரணமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். விவசாயும் ஆடுகளும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!