Skip to content
Home » செம வெயில்… திருச்சி மூதாட்டி சுருண்டு விழுந்து சாவு…

செம வெயில்… திருச்சி மூதாட்டி சுருண்டு விழுந்து சாவு…

  • by Senthil

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் அருகே உள்ள ஈச்சம்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் ராமர் இவரது மனைவி ராஜாமணி ( 58). இருவரும் பருத்திக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, கடும் வெயில் அடித்துள்ளது. வேலை செய்து கொண்டிருந்த ராஜாமணி திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த ராமர் அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனயில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!