Skip to content
Home » திருச்சியில் ரூ. 1.92 லட்சம் பறிமுதல்…. தேர்தல் பறக்கும் படை அதிரடி…

திருச்சியில் ரூ. 1.92 லட்சம் பறிமுதல்…. தேர்தல் பறக்கும் படை அதிரடி…

  • by Senthil

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.  எனவே  உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரம் மற்றும்  அதற்கு மேல்  பணம்  எடுத்து சென்றால்  அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள்.

இந்நிலையில் திருச்சி மேற்கு  சட்டமன்ற தொகுதி,  அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர்  நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பாபு என்ற நபரின் சரக்கு வாகனத்தில் ரூபாய் 1 லட்சத்து 92 ஆயிரத்து 160 ரொக்கம் இருந்தது தெரிய வந்தது. ஆனால் அதற்குரிய முறையான ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து திருச்சி மேற்கு  வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!