Skip to content
Home » திருச்சி ரவுடி என்கவுன்டர்… நடந்தது என்ன..?…

திருச்சி ரவுடி என்கவுன்டர்… நடந்தது என்ன..?…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பனையகுறிச்சியை சேர்ந்தவர் முத்துக்குமார் லாரி டிரைவர்.  இவரது மனைவி சரஸ்வதி இவர்களது மகன்கள் மூத்தவர் தங்கவேல், இளையவர் ஜெகன் என்கின்ற கொம்பன் ஜெகன் வயது (38). இவருக்கு மனைவி ஒரு மகள் உள்ளார். கொம்பன் ஜெகன் 12 வது வகுப்பு வரை படித்தவர் திருச்சி டோல்கேட், மணச்சநல்லூர், பாண்டிச்சேரி, சேலம், நாமக்கல் போன்ற இடங்களில் நேரடியாகவும் கூலிப்படையாகவும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர் இன்று பகல்

லால்குடி சிறுகனூர் சனமங்கலத்தில் காவல்துறையினர் பிடியிலிருந்து தப்பியதுடன் காவல் உதவி ஆய்வாளர் வினோத்தை சுட்டு விட்டு தப்பி ஓடும் பொழுது போலீசாரால் சுடப்பட்டு இறந்து விட்டார். சுடப்பட்டதில் கொம்பன் ஜெகனுக்கு உடம்பில் இரண்டு இடங்களில் குண்டுகள் பாய்ந்தது. காயம் பட்ட உதவி ஆய்வாளர் வினோத் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். என்கவுண்டர் செய்யப்பட்ட கொம்பன் ஜெகனின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!