பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் ஆக.11, 13 ஆகிய தேதிகளில் கரூர் – ஈரோடு இடையில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
