Skip to content
Home » வீட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்…. மீட்பு… திருச்சியில் பரபரப்பு…

வீட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்…. மீட்பு… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி, அரியமங்கலம் ஜெகநாதபுரம் கல்யாணராமன் தெருவை சேர்ந்தவர் குருநாதன் .இவரது மகன் பாபுராஜ் (48). லோடுமேன். குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி அபிராம சுந்தரி (வயது 44). இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ரோஷினி என்கிற மகளும், நிகில் என்கிற மகனும் உள்ளனர். இந்நிலையில் பாபுராஜ் மனைவி, குழந்தைகளை பிரிந்து தனியாக ஜெகநாதபுரத்தில் அம்மாவுடன் வசித்து வந்தார் .இந்நிலையில் பாபுராஜின் அம்மா வெளியூருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பூட்டியிருந்த வீட்டை பார்த்தபோது அழுகிய நிலையில் பாபுராஜ் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி அபிராம சுந்தரி கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார்? காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை  செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!