Skip to content
Home » திருச்சி பஸ் ஸ்டாண்டில் தூங்கிய பெண்ணிற்கு ”லத்தி சார்ஜ்”… வீடியோ…

திருச்சி பஸ் ஸ்டாண்டில் தூங்கிய பெண்ணிற்கு ”லத்தி சார்ஜ்”… வீடியோ…

  • by Senthil

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கடலூர், விருத்தாசலம்,அரியலூர்,பெரம்பலூர்,கரூர் மற்றும் புற நகர் பகுதிகளான சமயபுரம் , குழுமணி, பெட்டவாய்த்தலை குளித்தலை ,முசிறி,துறையூர் லால்குடி , துவாக்குடி, திருவெறும்பூர்,BHEL, நவல்பட்டு ஆகிய ஊர்களுக்கு உள்ளூர் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் நூற்றுக்கணக்கில் இயக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் ஆதரவற்றோர் மற்றும் பேருந்தை தவற விடுபவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து கிடைக்காதவர்கள் யாசகர்கள் இரவு நேர கடை நடத்தி வருபவர்கள் இரவு நேரங்களில் சத்திரம் பேருந்து

நிலைய நடைமேடையில் படுத்து உறங்குவது வழக்கம்.

பின்பு பேருந்து வந்தவுடன் அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வார்கள். இதே போல் இன்று அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பேருந்து நிலைய நடைமேடையில் அங்கு படுத்து உறங்கி உள்ளார். பேருந்து நடை மேடையில் படுத்து உறங்கிய அந்த பெண்ணை இரவு நேர பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் லத்தியால் கடுமையாக தாக்குவது போல் வீடியோ தற்பொழுது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. யார் அந்தப் பெண் எதற்காக அங்கு படுத்து உறங்கினார் என்ன காரணத்திற்காக அந்த பெண் காவலர் அந்தப் பெண்ணை தாக்கினார் என்பது குறித்து தகவல் தெரியவில்லை.

உறங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை பெண் காவலர் சரமாரியாக தாக்கும் வீடியோ தற்பொழுது வைரலாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. படுத்து உறங்கும் ஒரு பெண்ணை என்ன காரணம் என்று விசாரிக்காமல் சரமாரியாக தாக்க கூடாது என சக பயணிகள் வருத்தம் தெரிவித்து செல்லும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது. படுத்து உறங்கி கொண்டிருந்த பெண்ணை காவலர் தாக்கியதை சத்திரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ செய்துள்ளனர். இந்த நிலையில் பெண்ணை தாக்கிய காவலர் ஆயுதடைக்கு மாற்றம் செய்து திருச்சி கமிஷனர் சத்தியபிரியா உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!