Skip to content
Home » வீட்டில் தூங்கிகொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் செயின் பறிப்பு… திருச்சியில் சம்பவம்..

வீட்டில் தூங்கிகொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் செயின் பறிப்பு… திருச்சியில் சம்பவம்..

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பி.கே.அகரத்தை சேர்ந்தவர் ஆத்தி நாட்டார். இவருடைய  மனைவி  காமாட்சி (60). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதி கிராமத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். வழக்கம் போல் காமாட்சி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். தற்போது கோடை காலம் என்பதால் கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளனர்.  வீடு தனிமையில் இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இன்று அதிகாலை வீட்டிற்குள் நுழைந்து தூங்கிக்கொண்டிருந்த காமாட்சியின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலிச்செயினை பறித்து சென்றுள்ளனர். இதில் சுதாரித்துக்கொண்ட காமாட்சி சத்தமிட்டுள்ளார். உடனடியாக தாலி செயினுடன் மர்ம நபர்கள் தப்பிவிட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!