Skip to content
Home » திருச்சியில் வீட்டின் கதவை உடைத்து பேட்டரிகள் திருட்டு…. போலீஸ் விசாரணை..

திருச்சியில் வீட்டின் கதவை உடைத்து பேட்டரிகள் திருட்டு…. போலீஸ் விசாரணை..

திருச்சி திருவெறும்பூர் ஐ.ஏ.எஸ். நகரை சேர்ந்தவர் மோகன்(21). இவர் கே.கே.நகர் தங்கையாநகரில் உள்ள தனது உறவினர் வீட்டை பராமரித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்ற போது, வீட்டின் பின்பக்க ஜன்னல் கண்ணாடி உடைந்து கிடந்தது. இதில் சந்தேகம் அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் உள்ளே சென்று சேதனை செய்த போது இன்வெட்டர் பேட்டரி திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

மர்ம ஆசாமிகள், வீட்டின் பின்பக்க ஜன்னல் கண்ணாடியை உடைத்து கதவை திறந்து உள்ளே நுழைந்து பேட்டரியை திருடிச்சென்றது தெரிந்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்த கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!