Skip to content
Home » திருச்சி ஓட்டல் தொழிலாளி கொலையில் பெண் உட்பட 3 பேர் சிக்கினர்…..

திருச்சி ஓட்டல் தொழிலாளி கொலையில் பெண் உட்பட 3 பேர் சிக்கினர்…..

  • by Senthil

திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  கொலை செய்யப்பட்ட அந்த வாலிபர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் என்பதும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் தொழிலாளி விக்ரம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் மூன்று நபர்கள் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியது தெரியவந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிசிடிவி உதவியுடன் தப்பி ஓடிய கொலையாளிகளை  போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று விசாரணையில் ஒரு பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!