Skip to content
Home » திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு….. பயணிகள் கடும் வாக்குவாதம்

திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு….. பயணிகள் கடும் வாக்குவாதம்

  • by Senthil

திருச்சி விமான நிலையத்தில் இருந்து தினமும் காலை 8.05 மணிக்கு இண்டிகோ விமானம் பெங்களூரு  புறப்பட்டு செல்லும். வழக்கம் போல இன்றும் 160 பயணிகளுடன் விமானம் புறப்பட தயாராக இருந்தபோது திடீரென விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து  உடனடியாக விமானி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தொழில் நுட்பக்குழுவினர் வந்து பார்த்தனர். ஆனாலும்  விமானத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் பயணிகள்,  விமான நிலைய அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர்.  அவர்களை அதிகாரிகள்  சமாதானப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!