Skip to content
Home » திருச்சியில் பால் கேன்களுடன் வியாபாரி மாயம்…..

திருச்சியில் பால் கேன்களுடன் வியாபாரி மாயம்…..

திருச்சி ஏர்போர்ட் செம்பட்டு குடியான தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் என்கிற ரஞ்சித் ( 40). பால் வியாபாரியான இவர் வழக்கம் போல், மாத்தூர் குமாரமங்கலம் பகுதிகளுக்கு கேன்களுடன் பால் சேகரிக்கச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மனைவி பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அவரது மனைவி கௌசல்யா கேகே நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!