அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி அண்ணா சிலையில் உள்ள அறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பின்னர்
பால் பண்ணை ரவுண்டானா அருகே தமிழக அரசின் மகளிர் உரிமை திட்டத்தை கொண்டாடும் வகையில் ராட்சச பலூனை பறக்க விட்டனர். பெண்கள் அனைவரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.