Skip to content
Home » திருச்சி அருகே தாய்-தந்தைக்கு பளிங்குகல்லில் சிலை…

திருச்சி அருகே தாய்-தந்தைக்கு பளிங்குகல்லில் சிலை…

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த தொட்டியம் அருகே உள்ள பால சமுத்திரத்தில் உள்ள திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் ப.சரவணன் இவரது இல்லத்தில் தனது தாய் தந்தை இருவருக்கும் பளிங்குகல்லிலான 6-அடி உயரம் உள்ள திருவுருவச் சிலையைவடித்து தினந்தோறும் அதற்கு பூஜை செய்து வழிபட்டு வருகிறார் இவர் இப்பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த அளவு தினசரி பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். அதனின் ஒருபகுதியாக தனது தாயார் கமலம்பழனியப்பபிள்ளை யின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருவுருவ சிலையை வண்ண மலர்களால் அலங்கரித்து யாகங்கள் ஹோமங்கள் நடத்தி சிறப்பு பூஜை மற்றும் தீபாரதனை காட்டப்பட்டது பின்பு பாலசமுத்தில் உள்ள சரவணா மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் பொதுமக்களுக்கு

பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தார் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் மருத்துவர் ரோஸ்மின் தலைமையில் மருத்துவ குழுவினர் பொதுமக்கள் பெண்களுக்கு பல்வேறு விதமான நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் ஊட்டச்சத்து டானிக் இலவசமாக வழங்கப்பட்டது மற்றும் ரத்த அழுத்தம் சுகர் இலவசமாக பார்க்கப்பட்டு நோயாளிகளுக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டது .

பாலசமுத்திரம் தொட்டியம் மற்றும் அதனை சுற்றியுள்ள 300-க்கும் மேற்பட்டவர்கள் பயன் அடைந்தனர் இந்தமுகாமிற்கு தோளூர்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரிப.சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!