திருச்சி, பாலக்கரையை சேர்ந்தவர் பரணிகுமார் (28). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது.. இவரது மனைவி ஜோதி(45) , ஜோதிக்கு பரணிக்குமார் 3வது கணவர் என்று கூறப்படுகிறது. பரணிக்குமார் ஒரு வழக்கில் சிறைக்கு சென்று விட்டு 2 மாதங்களுக்கு முன் வெளியே வந்துள்ளார்.
அதன்பிறகும் அவர் மனைவி ஜோதியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். வழக்கம்போல் இருவருக்கும் நேற்றிரவும் திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் தகராறு நடந்த து. அப்போது ஜோதியை சரமாரியாக தாக்கினார். இதனை பார்த்த ஜோதியின் மகன் கூலித்தொழிலாளி மாதேஷ்(21), மற்றும் அவனது நண்பன் டோலு என்கிற முகமது தௌபீக் ஆகிய இருவரும் சேர்ந்து கபரணிகுமாரை கத்தி்யால் குத்தினர்.
இதில் சம்பவ இடத்திலேயே பரணிகுமார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய மாதேஷ் மற்றும் அவரது நண்பர் முகமது தௌவ்பீக் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.