Skip to content
Home » திருச்சியில் ரூ.4.10 லட்சம் பறிமுதல்…. பறக்கும் படை அதிரடி…

திருச்சியில் ரூ.4.10 லட்சம் பறிமுதல்…. பறக்கும் படை அதிரடி…

  • by Senthil

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திருச்சி ஓயாமேரி சஞ்சீவி நகர் அருகே பறக்கும் படை தலைமை அலுவலர் முத்துக்கருப்பன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த குழஞ்சியப்பன் என்பவர்

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்த பணத்தை கிழக்கு வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!