Skip to content
Home » திருச்சி அருகே புகையிலை பொருட்களை விற்றவர் கைது…

திருச்சி அருகே புகையிலை பொருட்களை விற்றவர் கைது…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே எலமனம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் வையம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கசாமி மற்றும் அவரது குழுவினர் நேற்று வழக்கம்போல் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எலமனம் பகுதியில் துரைமுருகன் என்பவர் சட்டவிரோதமாக ஹான்ஸ் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!