Skip to content
Home » திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

திருச்சி மாவட்டம்,  சிறுகனூர் அருகே நெய்க்குளம் கீழத்தெருவைச் சேர்ந்தவர்  ரெங்கராஜ்(75). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார். இவருடைய மகன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நெய்க்குளத்தில் தனியாக வசித்து வரும் ரங்கராஜ் கடந்த 8 ம் தேதி அன்று தனது மகனை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றுள்ளார். பின்னர் 9ம் தேதியான நேற்று இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து ரெங்கராஜ் இன்று சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் தங்கச்செயினை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!