திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் வீரந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான ஆனந்த். இவர் திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 20 ம் தேதி இரவு 9 மணிக்கு மேல் கல்பாளையம் ஈச்சம்பட்டி சாலையில் தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சக்தி நகர் பகுதியில் தனது மோட்டார் பைக்கில் நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் ஆனந்தை தாக்கிவிட்டு மோட்டார் பைக்கை பறித்து விட்டு தப்பி சென்றனர் இதில் காயமடைந்த ஆனந்த் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஆனந்த் புகார் அளித்தார்.புகாரின் பேரில் மண்ணச்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.