Skip to content
Home » திருச்சி அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர் போக்சோவில் கைது…

திருச்சி அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர் போக்சோவில் கைது…

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் அருகே டைப்ரைட்டிங் பள்ளி நடத்தி வரும் முதியவர் இளம்பெண், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் மற்றும் செல்போனில் புகை படம் எடுத்து வைத்து ரசித்து வந்தவரை திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (68) இவர் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் டைப்பிங் இன்ஸ்டியூட் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அந்த டைப் ரைட்டிங் இன்ஸ்டியூட் வரும் சிறுமிகள், பள்ளி மாணவிகள், திருமணம் ஆனவர்கள் என பலரிடம் டைப்ரைட்டிங் சொல்லிக் கொடுப்பது போல் சத்தியமூர்த்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு அவர்களின் அங்கங்களை தெரியாமல் புகைப்படம் எடுத்து வைத்து ரசித்து வந்ததாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு புகார் வந்தது. அதனை தொடர்ந்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி இச்ச சம்பவம் குறித்து போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!