Skip to content
Home » திருச்சி அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை….

  • by Senthil

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள இந்திரா நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் 65 வயதான நாராயணசாமி. இவர் திருச்சியில் உள்ள ஜவுளிக் கடையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேலை பார்த்து வந்துள்ளார்.கடந்த ஆறு மாதங்களாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது் இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள ஃபேன் கொக்கியில் கயிற்றால் தூக்குமாட்டி தொங்கிக் கொண்டிருந்தார். இதை கவனித்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த நாராயணசாமி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!