Skip to content
Home » திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு…

திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சிறுமருதூரில் உள்ள பங்குனி வாய்க்காலில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை போலீசார் மீட்டனர். சிறுமருதூரில் உள்ள பங்குனி வாய்க்காலில் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் கிடப்பதாக சமயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது .தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு சென்ற சமயபுரம் போலீசார் முதியோரின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக  ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இங்கு வந்தார்? எப்படி இறந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!