Skip to content
Home » திருச்சி அருகே ரைஸ்மில் உரிமையாளர் வீட்டில் கொள்ளை…..

திருச்சி அருகே ரைஸ்மில் உரிமையாளர் வீட்டில் கொள்ளை…..

திருச்சி , திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை வ உ சி நகரை சேர்ந்தவர் சண்முகவேலு இவரது மகன் சரவணன் (43) இவர் ரைஸ் மில் வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 1ம் தேதி அவரது உறவினர் தஞ்சாவூரில் இறந்து போனதற்கு துக்க நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்று விட்டு சென்றவர்கள் 2ம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டில் முன்பக்க கிரில் கேட்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பாரதப் பொழுது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது அதன் அடிப்படையில் உடனடியாக சரவணன் துவாக்குடி போலீஸ் சாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்ட துவாக்குடி போலீசார் சரவணன் வீட்டு பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க ஆரம், 4 பவுன் தங்க ஆரம், ஒரு ஜோடி தோடு, மோதிரம், தங்க ருத்ராட்ச மாலை என சுமார் 11 பவுன் திருட்டுப் போய் இருப்பது தெரிய வந்தது. இது சம்பந்தமாக சரவணன் துவாக் குடி காவல் நிலையத்தில் நேற்று கொடுத்த புகாரின் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!