Skip to content
Home » திருச்சி அருகே டூவீலரில் ஆடுகளை திருடிய 2 வாலிபர்கள் கைது…

திருச்சி அருகே டூவீலரில் ஆடுகளை திருடிய 2 வாலிபர்கள் கைது…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே அசூர் பொய்கை குடி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் வயது (44) இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இவரது ஆடுகள் அசூர் கருப்பு கோவில் அருகே மேய்ந்து கொண்டு இருந்தது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் ஆட்டை இருசக்கர வாகனத்தில் வைத்து திருடி சென்றனர். இதனை பார்த்த கோபிநாத் உடனடியாக துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து இரு சக்கர வாகனத்தில் ஆட்டை திருடி சென்ற அசூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் (27) மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா கீரனூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் (25) ஆகிய இருவர் மீதும் துவாக்குடி போலீசார் வழக்கு பதிந்து அவர்களிடமிருந்து ஆட்டையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!