Skip to content
Home » திருச்சி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை…

திருச்சி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை…

  • by Senthil

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே மணியங்குறிச்சியில் லாரியின் தவணைத் தொகையை கட்ட முடியாததால் மன விரக்தியடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுகனூர் அருகே சீதேவிமங்கலம் ஊராட்சி மணியங்குறிச்சியைச் சேர்ந்தவர் 37 வயதான கமலக்கண்ணன். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது. இவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு தனியார் நிதி நிறுவனத்தில் தவணை முறையில் லாரி ஒன்று வாங்கியுள்ளார்.தவனைத் தொகையை சரியாக கட்டி வந்துள்ளார். லாரிக்கு சரியாக லோடு கிடைக்காததாலும் போதிய வருமானம் இல்லாததாலும் கடந்த இரண்டு மாதமாக கமலக்கண்ணனால் தவணைத் தொகை கட்ட முடியவில்லை. தவணை தொகையை கட்டாததால் தனியார் நிதி நிறுவனம் தவணைத் தொகை கட்டுமாறு கமலக்கண்ணிடம் கூறியுள்ளனர். பணம் இல்லாததாலும்,தவணைத் தொகையை கட்ட முடியாமலும் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார் கமலக்கண்ணன்.

இந்நிலையில் கடந்த 13 ம் தேதி வீட்டில் விஷம் அருந்தி மயங்கி கிடந்தார்.இதைக் கண்டு அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!