Skip to content
Home » திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியோர் உயிரிழப்பு….

திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியோர் உயிரிழப்பு….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் நம்பர் 1 டோல்கேட் பேருந்து நிறுத்ததில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியோர் மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அரியலூர் மாவட்டம் அருகே உள்ள முத்துவான் கிராமத்தை சேர்ந்த கணேசன்(71) மேலும் இவர் மாற்றுதிறனாளி என்பதும் தெரியவந்தது. மேலும் கொள்ளிடம் போலீசார் முதியவர் வைத்திருந்த செல்போன் நம்பர் மூலமாக உறவினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் கொள்ளிடம் போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்ட உறவினரிடம் முதியவரின் உடலை ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!