திருச்சி ஸ்ரீரங்கம் சாத்தார வீதியை சேர்ந்தவர் செந்தில்.இவரது மனைவி பிரியா ( 33) சம்பவத்தன்று வீட்டில் இருந்த பிரியா திடீரென்று மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து செந்தில் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியாவை தேடி வருகின்றனர்.
இதேபோன்று திருச்சி இ.பி ரோடு கருவாடுபேட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து.இவரது மகள் பிரியா (வயது 17 )பிளஸ் 2 பாதியிலேயே நிறுத்திவிட்டார். இவர் நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை மாரிமுத்து கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்தவர் அருண்குமார் இவரது மனைவி தேவதர்ஷினி (வயது 22) இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்த தேவதர்ஷினி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து அருண்குமார் பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேவதர்ஷணியை தேடி வருகின்றனர்.