Skip to content
Home » திருச்சி ஊர்க்காவல் படையில் துணை வட்டார தளபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம்….

திருச்சி ஊர்க்காவல் படையில் துணை வட்டார தளபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம்….

திருச்சி மாநகர கமிஷனர்  ஊர்க்காவல் படையில் துணை வட்டார தளபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிக்கை வௌியிட்டுள்ளார்…. அவர் கூறியதாவது…. காவல்துறையுடன் இணைந்து குற்றத்தடுப்பு, பாதுகாப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை வட்டாரதளபதி (பெண் ) காலியிடம் -1 பூர்த்தி செய்யப்பட உள்ளது. 18-50 வயதுக்குள் இருக்க வேண்டும். திருச்சி மாநகரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குற்ற வழக்குகள் எதிலும் சம்பந்தப்பட்டவராக இருக்க கூடாது. எந்தவொரு அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருக்க கூடாது.

வி்ண்ணப்பிக்கும் முறை… பெண் விண்ணப்பதாரர்கள், தங்களது வயது, கல்வித்தகுதி, தற்போது பணிபுரியும் விபரம் , குடும்ப அட்டை, விளையாட்டு சான்றிதழ் ஆகிவற்றுக்கான அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் சான்றொப்பமிட்ட நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3 ஆகியவற்றுடன்  சுய விபரப்பட்டயலுடன் கூடிய முகவரி எழுதப்பட்ட விண்ணப்பத்தை வட்டார தளபதி, ஊர்க்காவல்படை அலுவலகம், கண்டோன்மெண்ட், திருச்சி மாநகரம் 10.12.2023 தேதிக்குள் அனுப்ப வேண்டும். என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!