Skip to content
Home » குடிநீர் குழாய் உடைந்ததை சரிசெய்து 4 மாதமாகியும் ரோடு போடவில்லை..

குடிநீர் குழாய் உடைந்ததை சரிசெய்து 4 மாதமாகியும் ரோடு போடவில்லை..

திருச்சி, பொன்மலையடிவாரம் to ஜெயில் கார்னர் செல்லும் பிரதான சாலை அகலபடுத்தும் வேலை நடந்தது. அதில் டீசல் காலனி பகுதி சாலையில் நடுவில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கசிந்து இருந்தால், சுமார் 20 அடியிற்கு மேல் தார் ரோடு போடாமல் இருந்தார்கள். குழாய் கசிந்ததை சரி செய்து 4 மாதம் மேல் ஆகியும், அந்த பகுதியில் தார்சாலை போடாமல் கொத்திய நிலையில் உள்ளது .

கொத்திய சாலை பணிகள் அந்த பகுதியில் நடைபெறவில்லை. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயமும், பெண்கள் அவ்வழி செல்ல அச்சப்படுகின்றனர். வாகனத்தின் டயரும் நிலை குலைந்து போகிறது.

4 மாதங்கள் மேலே ஆகியும் வேலை செய்யாமல் அலட்சியமாக இருப்பதும், பொது மக்கள் அவதி படுவதை கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!