Skip to content
Home » தாறுமாறான வேகம்…..திருச்சியில் தனியார் பஸ் மோதி வாலிபர் பலி….20 பயணிகள் காயம்

தாறுமாறான வேகம்…..திருச்சியில் தனியார் பஸ் மோதி வாலிபர் பலி….20 பயணிகள் காயம்

அரியலூரில் இருந்து தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. லால்குடி அடுத்து வாளாடி வந்த போது தனியார் பேருந்து கட்டுப்பாட்டு இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. அதன்பிறகும் தொடர்ந்து ஓடி  சாலை ஓரத்தில் உள்ள  மரத்தில் மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே இரு சக்கர வாகனத்தில் வந்தவர் பலியானார்.  விபத்தை பார்த்த பயணிகள் அலறினர். சத்தம் கேட்டு  அந்த பகுதி மக்கள் ஓடிவந்து  இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த பயணிகளை மீட்டனர். பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தனியார் பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு பயணிகளை ஏற்றுவதற்காக அதிவேகமாக சென்றதால் இதுபோன்ற விபத்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!