Skip to content
Home » திருச்சியில் கொட்டி தீர்க்கும் மழை…. பொதுமக்கள் அவதி… படங்கள்..

திருச்சியில் கொட்டி தீர்க்கும் மழை…. பொதுமக்கள் அவதி… படங்கள்..

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே சுமார் 160 கி.மீ. தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார் 420 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது

உடன் ஒரு பகுதியாக திருச்சியில் பாலக்கரை, மேலப்புதூர் | மத்திய பேருந்து நிலையம், சக்கரம் பேருந்து நிலையம், கே.கே.நகர், கிராப்பட்டி, ஸ்ரீரங்கம், சிங்காரத்தோப்பு, தில்லைநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் திருச்சி மாவட்டம் சுற்றுவட்டாரங்களில் காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காலை பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்லும்பணியாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!