Skip to content
Home » திருச்சியில் பட்டப் பகலில் துணிகரம்….வியாபாரியை தாக்கி வழிப்பறி…

திருச்சியில் பட்டப் பகலில் துணிகரம்….வியாபாரியை தாக்கி வழிப்பறி…

  • by Senthil

திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டை சேர்ந்தவ ராயப்பன். (வயது 32) . இவர் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு அருகிலிருந்த உணவகத்தில் உணவருந்த சென்றார். அப்போது மர்ம நபர்கள் இருவர் ராயப்பனை அடித்து மிரட்டி அவர் வைத்திருந்த 10000 ம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பியோ டிவிட்டனர். இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசில் ராயப்பன் புகார் அளித்தார் . புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடித் வருகின்றனர். திருச்சி காந்தி மார்க்கெட்டில் பட்டப்பகலில் வியாபாரியை தாக்கி வழிப்பறி கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!