Skip to content
Home » திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது…

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது…

திருச்சியில் கடந்த 13.11.2023-ந்தேதி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமகள்
தெருவில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காண்பித்து பணத்தை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில்  வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல அம்பிகாபுரத்தை சேர்ந்த ரவுடி வெற்றி @ வெற்றிவேல்(31)  என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.   மேலும் விசாரணையில் ரவுடி வெற்றி @ வெற்றிவேல் என்பவர் மீது திருச்சி மாநகரத்தில் கொலை, கத்தியை காண்பித்து பணம் பறித்ததாக 5 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் வழிபறியில்
ஈடுபட்டதாக 4 வழக்குகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் வழிப்பறி செய்ததாக 5 வழக்குகளும், பூட்டியிருந்த வீட்டில் திருடியதாக 2 வழக்குகளும், அரியலூர் மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் பணத்தை  பறித்ததாக 3 வழக்குகள் உட்பட மொத்தம் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரவுடியான வெற்றி மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. மேலும் திருச்சி கமிஷனர் காமினி இதுபோல் சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!