Skip to content
Home » திருச்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி…. பெற்றோர்கள் நெகிழ்ச்சி…

திருச்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி…. பெற்றோர்கள் நெகிழ்ச்சி…

திருச்சி மேலக்கல்கண்டார் கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான தூய மரியன்னை நடுநிலைப் பள்ளியில் 69 ஆவது ஆண்டு விழா பள்ளியின் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாத்திமா விஜயஸ்ரீ தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். இதனைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள், பதக்கங்கள் சான்றிதழ்கள், வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி

நடைபெற்றது. இதில் நடனம், ஆங்கில உரையாடல் நாடகம், விவசாயம் குறித்த நடனம் ஆகியவற்றை அரங்கேற்றம் செய்து மாணவர்கள் தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தினர். இதனைக் கண்ட பெற்றோர்களும், பார்வையாளர்களும் நெகிழ்ந்தனர். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை குழுவினர் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!