திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்க சார்பில் செந்தண்ணீர்புரம் உயர்நிலைப் பள்ளியிற்கு பல ஆண்டுகளாக உட்கட்டமைப்பு வசதி மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்துதல் போன்ற செயல்பாடுகளுடன் , பள்ளிக்கு தேவையான உதவிகள் செய்து வரும் மக்கள் சக்தி இயக்கம், தற்பொழுது பள்ளியின் வெளிசுவர்களில் மக்கள்
சக்தி இயக்க நிர்வாகி வெ.ரா.சந்திரசேகர் அவர்கள் திருக்குறள் களை எழுதி இருக்கிறார். நம்ம ஊருப்பள்ளி என்று தனது சொந்த செலவில் திருக்குறள் எழுதிய மக்கள் சக்தி இயக்க நிர்வாகி வெ.இரா.சந்திரசேகருக்கு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் பொது மக்கள் சார்பில் பாராட்டுகள் தெரிவித்துக் கொள்கிறோம் .