திருச்சி சிங்கார தோப்பு யானை குளத்தில் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் 20 ரூபாய் வாங்குவதாகவும் அதற்கு ரசீது கேட்டால் ஒரு கார்டில் வண்டி எண் எழுதி கொடுப்பதாகவும் மேலும் அதனை தட்டி கேட்டால் மிரட்டுவதாகவும் பொதுமக்கள் புகார்
கூறுகின்றனர். அதில் மாநகராட்சி ரசீது இல்லை , கையொப்பம் ,தேதி, நேரம் எதுவும் இல்லை , இந்த பணம் யார் வசூல் செய்கிறார்கள் என்ற தகவல் இல்லை. உடனடியாக மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.