Skip to content
Home » திருச்சி அருகே 110 லிட்டர் சாரய ஊரல்களை அழித்த எஸ்பி சுஜித்குமார்…

திருச்சி அருகே 110 லிட்டர் சாரய ஊரல்களை அழித்த எஸ்பி சுஜித்குமார்…

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தால் எண்ணற்ற உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் – இதன் எதிரொழியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கள்ளச்சாராயம், சாரய ஊரல் போன்றவை நிகழ்கிறதா ? கள்ள சந்தையில் மது விற்பனை நடைபெறுகிறதா? கரும்பு ஆலைகளில் இருந்து மெத்தனால் எரிபொருள் வெளியே செல்கிறதா? போன்ற பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியவர் சீலி கிராமத்தில் ஊர் திருவிழாவிற்காக அவ்வூரை சேர்ந்த அந்தோணி பீட்டர் என்பவர் தனது வீட்டின் மூங்கில் தோட்டத்தில் 110 லிட்டர் சாராய ஊரல் போட்டு இருப்பது தெரியவந்தது – திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் உடனடியாக இது குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரிடம் தகவல் அளித்தனர் – இதன் அடிப்படையில் எஸ்.பி சுஜித் குமார் மற்றும் காவல்துறையினர்
நேரில் சென்று ஊரல் டிரம்களை அழித்தனர்.

கள்ளச்சாராயத்தால் தமிழகத்தில் எண்ணற்ற உயிர்கள் பரிபோன நிலையில் – காவல்துறையினர் மிகக்கடுமையான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதனை தெரிந்தும் இதுபோன்று சாராயம் காய்ச்சுவது ஊறல் போடுவது போன்ற வேலைகளில் தைரியமாக சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!