தமிழ்நாடு டீ ஸ்டால் உரிமையாளர்கள் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் அமைப்புச் செயலாளர் ராவுத்தர்ஷா தலைமையில் நடைபெற்றது .
கூட்டத்தில் தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் அப்துல் ஹாசன்,பொருளாளர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா கூறியதாவது:-
சிலிண்டர் விலை விசயமாய் எங்கள் வியாபாரிகளின் கோரிக்கையும், தொழிலாளர்களின் அவஸ்தைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் கமர்சியல் சிலிண்டர் வியாபாரிகளுக்கு ரூ. 1700 வரை விற்கப்பட்டது. இந்த சிலிண்டர் கேஸ் விலை தற்போது ரூ.5200க்கு விற்கபடுகிறது. இந்த விலை ஏற்றம் யாரால் ஏற்றப்பட்டது. இந்த விலை ஏற்றம் நியாயம்தானா? ஏதோ காரணத்தால் ஏற்றப்பட்டால் 1000 அல்லது 1500 என்றால் கூட பரவாயில்லை. அதிகமான விலைக்கு விற்பதால் வியாபாரிகளும், தொழிலாளர்களும், அதோடு பொதுமக்களும் பாதிப்புக்க உள்ளாவார்கள் என்பதை இரு அரசுகளும், மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் சிந்திக்க வேண்டும். இதுமட்டும் அல்லாமல் அத்தியாவசிய தேவைகளான மளிகை பொருட்களின் ஏற்றப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் சாதாரண டீக் வியாபாரிகள் ரூ.5200- கொடுத்து கேஸ் சிலிண்டர் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்து முதலீடு பார்க்க முடியாத நிலை உள்ளது. ஆகையால் மத்திய,மாநில அரசுகளும், கோர்ட் நீதி அரசர்களும் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும்.இதற்கு சரியான முடிவு எடுக்காவிட்டால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும். தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்கள்.

